Skip to main content

About Election

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்; சின்னங்கள்; வாக்காளர்கள் தொகை விபரம்
[ செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2010, 01:37.40 PM GMT +05:30 ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தோ்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் வேட்பாளர்களின் பெயர்கள்,அவர்களின் சின்னங்கள் அடங்கிய விபரங்களையும் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், சின்னங்கள் விவரம்

01. ஐதுருஸ் மொஹமட் இல்லியாஸ் - அன்னாசி
02. மொஹமட் ஹாசிம் மொஹமட் இஸ்மாயில் - கழுகு

03. விக்கிரமபாகு கருணாரத்ன – மேசை
04. உபாலி சரத் கோன்கஹே - கேட்
05. சன்ன ஜானக சுகத்சிறி கமகே – முயல்
06. சிறிதுங்க ஜயசூரிய – முச்சக்கர வண்டி
07. விஜே டயஸ் - கத்தரிக்கோல்
08. முத்துபண்டார தெமினிமுல்ல – உண்டியல்
09. சேனாரத்ன த சில்வா – கொடி
10. அருண த சொய்சா – மோட்டார் கார்
11. சனத் பின்னதுவ - இரட்டைச் செடிகள்
12. லால் பெரேரா – தொலைபேசி
13. சரத் பொன்சேகாஅன்னம்
14. சரத் மனமேந்திர – வில்லும் அம்பும்
15. மொஹமட் முஸ்தபா – தொப்பி
16. டபிள்யு.வி.மஹிமன் ரஞ்சித் - அலுமாரி
17. மகிந்த ராஜபக்ஷ - வெற்றிலை
18. பனாகொட தொன் பிரின்ஸ் சொலமன் அநுர லியனகே – கங்காரு
19. உக்குபண்டா விஜேகோன் - பலாப்பழம்
20. எம்.கே.சிவாஜிலிங்கம் - கப்பல்
21. பத்தரமுல்லே சீலரத்ன தேரர் – உழவு இயந்திரம்
22. அச்சல அசோக சுரவீர – தேங்காய்

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 14,088,500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களைப் பதிவு செய்யும்போது குறிப்பிட்ட சிலரின் பெயர் இருதடவை பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அது தற்போது திருத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாவட்ட ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றோரின் எண்ணிக்கை வருமாறு :

கொழும்பு மாவட்டம் 1,521,854
கம்பஹா மாவட்டம் 1,474,464
களுத்துறை மாவட்டம் 813,233
கண்டி மாவட்டம் 970,456
மாத்தளை மாவட்டம் 342,684
நுவரெலியா மாவட்டம் 457,137
காலி மாவட்டம் 761,815
மாத்தறை மாவட்டம் 578,858
அம்பாந்தோட்டை மாவட்டம் 421,186
யாழ். மாவட்டம் 721,359
வன்னி மாவட்டம் 266,975
மட்டக்களப்பு மாவட்டம் 333,644
திகாமடுல்ல மாவட்டம் 420,835
திருகோணமலை மாவட்டம் 241,133
குருணாகல் மாவட்டம் 1,183,649
புத்தளம் மாவட்டம் 495,575
அநுராதபுரம் மாவட்டம் 579,261
பொலன்னறுவ மாவட்டம் 280,337
பதுல்ல மாவட்டம் 574,814
மொனராகல மாவட்டம் 300,642
இரத்தினபுரி மாவட்டம் 734,651
கேகாலை மாவட்டம் 613,938

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.