முஸ்லிம் மக்களுடைய நோன்புப் பெருநாள் முடிவடைந்த நிலையில் மூதூர் மக்களின் போக்குவரத்துப் பிரச்சனை மட்டும் இன்னும் முடியவில்லை என்ற விசனம் மூதூர் மக்கள் மத்தியில் உருவெடுத்து இப்பொழுது பெரிதாகி உள்ளது. மூதூருக்கு சொந்தமான கப்பல் சேவையும் நிறுத்தப் பட்டதுடன் கடந்த ஒரு மாத காலமாக சேவையில் இல்லாமல் இருப்பது கவலையை தரும் ஒரு விடயமாக காணப்படுகின்றது. அத்துடன் மூதூர் ப. நோ.கூ.சங்கத்திட்குச் சொந்தமான படகு ஏலவே சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடல் மார்க்கப் போக்குவரத்து முற்றாக நிருத்தப்பட்டமையால் மக்கள் இறால்குழி பாதை வழியாக பயணிக்கின்றனர். இப்பாதை திருத்தப்பட்டு வருவதாலும் தட்காலிக பாலத்தில் சாதாரண பொதுமக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாலும் நோயாளிகள் சிறு பிள்ளைகள் பெண்கள் ஆகியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இது அரசியல் வாதிகளே உங்களாலும் கவனிக்கப்படா விட்டால் பாவம் வாக்களித்த முஸ்லிம் மூதூர் மக்கள்.
மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு தெரிவித்தார்.
Comments
Post a Comment