Skip to main content

மூதூர் வெடிவிபத்தில் இரண்டு சிறுவர்கள் மரணம்:மூவர் படுகாயம்


23.10.2010 அன்று காலை 9.45 அளவில் மூதூரில் இடம்பெற்ற வெடிவிபத்தொன்றில் ஐந்து சிறுவர்கள் படுகாயமுற்று, அதில் இரண்டு பேர் பரிதாபகரமான மரணத்தைத் தழுவியுள்ளனர். எஞ்சிய மூவரும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தகவல் தருகின்றார்.
மூதூர் தக்வா நகர் ஜெற்றியில் கிடந்த மர்மப் பொருளொன்றை பிரஸ்தாப சிறுவர்கள் எடுத்து விளையாட முற்பட்ட போதே அது வெடித்துள்ளது.
குண்டு வெடிப்பையடுத்து பலத்த காயங்களுடன் நிலத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் ஐவரும் அயலவர்களால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள், மூதூர் முதலாம் குறிச்சியை சேர்ந்தவர்களாவர். 8 வயதான முஜாகிதீன் சர்பான், 5 வயதான நஜீம் ஷா, 3 வயதான நசீர், 9 வயதான ராசிக் இம்ரான், 10 வயதான சல்மான் ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
காயம் பாரதூரமானதாக இருந்த காரணத்தால் அங்கிருந்து திருகோணமலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் ஒருவரும், திருமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்னொருவருமாக இரண்டு சிறுவர்கள் தற்போதைக்கு பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர்.
சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் மற்றைய மூன்று மாணவர்களின் நிலையும் கவலைக்கிடமானதாக இருப்பதாகவே திருகோணமலை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.