| 23.10.2010 அன்று காலை 9.45 அளவில் மூதூரில் இடம்பெற்ற வெடிவிபத்தொன்றில் ஐந்து சிறுவர்கள் படுகாயமுற்று, அதில் இரண்டு பேர் பரிதாபகரமான மரணத்தைத் தழுவியுள்ளனர். எஞ்சிய மூவரும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தகவல் தருகின்றார். |
| மூதூர் தக்வா நகர் ஜெற்றியில் கிடந்த மர்மப் பொருளொன்றை பிரஸ்தாப சிறுவர்கள் எடுத்து விளையாட முற்பட்ட போதே அது வெடித்துள்ளது. குண்டு வெடிப்பையடுத்து பலத்த காயங்களுடன் நிலத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் ஐவரும் அயலவர்களால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள், மூதூர் முதலாம் குறிச்சியை சேர்ந்தவர்களாவர். 8 வயதான முஜாகிதீன் சர்பான், 5 வயதான நஜீம் ஷா, 3 வயதான நசீர், 9 வயதான ராசிக் இம்ரான், 10 வயதான சல்மான் ஆகியோரே காயமடைந்தவர்களாவர். காயம் பாரதூரமானதாக இருந்த காரணத்தால் அங்கிருந்து திருகோணமலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் ஒருவரும், திருமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்னொருவருமாக இரண்டு சிறுவர்கள் தற்போதைக்கு பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர். சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் மற்றைய மூன்று மாணவர்களின் நிலையும் கவலைக்கிடமானதாக இருப்பதாகவே திருகோணமலை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு தெரிவித்தார்.

Comments
Post a Comment