சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் றிசானா நபீக்கிற்கு விடுதலை வேண்டி மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (31) மாபெரும் பிரார்த்தனை , ஸலாதுல் ஹாஜா தொழுகை , பிரசார நிகழ்வும் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது . மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்கள் றிசானா நபீக்கின் விடுதலைக்காக ஒன்று கூடிய மைதானத்தில் பாடசாலை மாண வர்கள் , மத்ரஸா மாணவர்கள் , சமய , சமூக தலைவர்கள் , பொது மக்கள் என எல்லோரும் மைதானத்தினுள் அமர்ந்திருந்தனர் . ஆரம்பமாக அஷ்ஷேஹ் எம் . எம் . முனாஸ் ( ரஸாதி ) யினால் சொற்பொழிவு நிகழ்த்தப் பட்டது . இதனை அடுத்து தனித்தனியாக ஸலாதுல் ஹாஜா தொழுகையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தொழுதனர் . இதேவேளை , எழுதப் பட்டிருந்த சுலோ கங்களில் இரு புனித தலங்களின் பணி யாளரே எங்கள் ஏழைச் சகோதரி றிசானா நபீக்கை உங்கள் பெரும் தன்மையினால் மன்னியுங்கள் . “ அன்புத் தாயே எங்களது சகோதரியை மன்னியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் அருள் புரியட்டும் ” என்...