"எவர் கல்விக்கு உதவுகின்ராரோ அவர் மரணிப்பதில்லை" என்ற நபி மொழிகேட்ப நாம் கல்விக்கு உதவ வேண்டிய தேவை ஏற்படுகின்றது. மூதூர் கல்வி வளர்ச்சியில் எமது கவனத்தை சற்று நோக்கினால், அது கடந்த காலங்களில் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. அதிலும் மூதூர் மத்திய கல்லூரி சம்பந்தமாக மிக்க ஆராய வேண்டிய தேவை எம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. அங்குள்ள தேவைகளை அடையாளம் கண்டு அது சம்பந்தமாக உதவிகளை வழங்க வேண்டும். எம் பிள்ளைகளும் நாளை மூதூரிலே சொந்த இடத்திலே கல்விகற்க நாம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இது சிந்தனைக்காக நான் தரும் சிறிய விடயம்.
மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு தெரிவித்தார்.
Comments
Post a Comment