அண்மையில் மூதூர் பிரதேச சபைக்கு தெரிவான அரசியல் குழு தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அபிவிருத்திப் பணியில் இறங்கி வேலை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே மக்களின் அபிலாசைகளை கவனத்தில் எடுத்து அவற்றை அக்குழு பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை மக்களுக்கு நிறையவே உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் எமது சபைக்கு 80 மில்லியன் ரூபா நெல்சிப் திட்டத்தின் கீழும் 72 இலட்சம் ரூபா மூதூர் மாவட்ட நீதிமன்றிலிருந்தும் கிடைத்திருப்பது இக்குழுவுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இதற்காக மூதூர் புத்திஜீவிகளின் ஆலோசனையை பெற்று சபை இயக்கம் போது அபிவிருத்திப் பாதையில் வெற்றி பெறுவதுடன் நீண்ட காலத்திட்டத்தை தூர நோக்காக கொண்டு சபை இயங்க முடியும்.
மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு தெரிவித்தார்.
Comments
Post a Comment