மூதூர் தள வைத்தியசாலையில் கடமை புரிந்த சரோ என்றழைக்கப்படும் தாதி ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறைவைக்கப்பட்டுள்ளார். இவர் மூதூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் கர்ப்பத்தை சட்ட ரீதியற்ற முறையில் கலைத்தபோது அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துள்ள நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவ் விளம்பெண் தற்போது திருகோணமலை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு தெரிவித்தார்.
Comments
Post a Comment