மூதூர் ப. நோ.கூ.ச. இயக்குனர் சபை தற்போது கலைக்கப்பட்டுள்ளது. இவ் இயக்குனர் சபையில் பட்டித்திடலைச் சேர்ந்த கே. நவநாதன் மாஸ்டர் தலைவராகவும் மூதூர் நடுத்தீவைச் சேர்ந்த நசுருல்லா என்பவர் உபதலைவராகவும் செயல்பட்டனர். இயக்குனர் சபையானது தனது நிதி நடவடிக்கைகளை உரியமுறையில் பேண வில்லை என்றும் இவை யாவும் கிழக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களத்திட்கு ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்பட வில்லை என்றும் அத்துடன் ப. நோ.கூ.ச. தின் சொத்துக்களையும் வியாபாரங்களையும் சரியாக முன்னெடுத்துச் செல்லவில்லை என்றும் கிழக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களம் இச் சபையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. இச்சபை ஊழியர்களின் EPF மற்றும் சம்பளம் என்பவற்றையும் சரிவர வழங்கவில்லை என ஊழியர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இதனை தொடர்தும் செயற்படுத்தும் வண்ணம் அல்- மீனா வித்தியாலய அதிபர் ஜனாப். பசீர் அவர்களிடம் தலைவர் பதவி தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
Comments
Post a Comment