JICA திட்டத்தின் கீழ் மூதூர் தஹா நகர் மற்றும் தஹா நகர் பள்ளி வீதி என்பன கடந்த 19. 05. 2011 அன்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன் வேலைகள் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் நடைபெறும் என்று உத்தியோக பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ் வேலைகளை m2 லங்கா கட்டுமான நிறுவனம் எடுத்துள்ளது. இக்கட்டுமான வேலைகள் திறமையாக நடைபெறுவதை பொதுமக்களாகிய நாம் உறுதிப்படித்திக்கொள்ள வேண்டும். இதே நேரம் மூதூர் சின்னப்பாலம், அந் நஹார் பாலம் என்பன புதிதாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் வேதத்தீவு மின்சாரம் திறந்து வைக்கபட்டது.
அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
Comments
Post a Comment