JICA திட்டத்தின் கீழ் மூதூர் தஹா நகர் மற்றும் தஹா நகர் பள்ளி வீதி என்பன கடந்த 19. 05. 2011 அன்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன் வேலைகள் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் நடைபெறும் என்று உத்தியோக பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ் வேலைகளை m2 லங்கா கட்டுமான நிறுவனம் எடுத்துள்ளது. இக்கட்டுமான வேலைகள் திறமையாக நடைபெறுவதை பொதுமக்களாகிய நாம் உறுதிப்படித்திக்கொள்ள வேண்டும். இதே நேரம் மூதூர் சின்னப்பாலம், அந் நஹார் பாலம் என்பன புதிதாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் வேதத்தீவு மின்சாரம் திறந்து வைக்கபட்டது.
மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு தெரிவித்தார்.

Comments
Post a Comment