Skip to main content

ஜலசமாதியான மூதூர் மக்களின் நினைவுகளும் சமாதியான படகுச் சேவையும்

muththoraan-faisகிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியாரக் குடா கடலின் தெற்கே அமைந்துள்ள மூதூர், மகாவெலி கங்கையின் சங்கமத்தில் தோல்கொடுத்து நிற்கும் மிக முக்கியமான முதுமை ஊராகும். 1658 இல் வெள்ளையர்களின் கப்பலின் மாலுமியாக இருந்த ரொபட் நொக்ஸ் மூதூர் வழியாக தப்பிச் செல்லும் போது அங்கு அவர் கண்டதாக கூறுபவர்கள், அதற்கும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இருந்தே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது வரலாறு.
இவர்கள் திருகோணமலை நகருடன் தங்களின் அன்றாட மற்றும் வர்த்தகத் தொடர்புகளை பேனிவந்துள்ளனர். அன்றிலிருந்து A15 பாதை திறக்கும் வரை மூதூர் மக்களின் பிரதான போக்குவரத்து, கடல் மார்க்கமாகவே காணப்பட்டுள்ளது. மாரி, சித்திரை, பௌர்னமி, அமாவாசை என்ற ஒவ்வொரு கடல்கொந்தளிப்புகளுக்கும் மத்தியில் இம்மக்கள் தமது போக்குவரத்தை வத்தை, பாய்க்கப்பல், வெளி இயந்திர சிறிய படகு, இயந்திரப்படகு, கப்பல் என்று நவீன காலம் வரை தமது போக்குவரத்து வாகனத்தை மாற்றியமைத்து, பிரயாணம் செய்ததே தவிர போக்குவரத்து வழிகளை மாற்றவில்லை. இவ்வாறு பிரயாணம் செய்யும் போது பல்வேறு நபர்கள் கடலுக்கு பலியாகி இருக்கின்றனர்.
1993 ஜனவரி 25ம் திகதி மூதூர் ஒருபோதும் காணாத பேரிழப்பை சந்தித்தது. அன்றய தினம் திருகோணமலையிலிருந்து பி.ப. 2.30 sinking-boatமணிக்கு புறப்பபட்ட தனியார் படகு இன்று வரைக்கும் கரைசேரவில்லையென்பதே மூதூர் கண்ட மாபெரும் முதல் சோகமாகும். ஆன்றய தினம் 120 பேர்களுடன் பயணித்த அப்படகில் இருந்தவர்களில் சுமார் 100 பேர் வரை ஜலசமாதியானார்கள் என்பது இன்றும் கண்ணீர் சிந்தும் காவியமாக மூதூர் மக்கள் ஒவ்வொருவரினதும் மனங்களில் நீங்கா நினைவு பெற்றுள்ளது. கடற்கரையையும் பாதாள மலைப்பகுதியையும் காணும் மக்கள் ஜலசமாதியானோர்களின் ஞாபகத்தில் வாடுவதுண்டு.
1993ம் ஆண்டின் பின்னர் தனியார் படகுச் சேவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் இச்சேவையை கொண்டுவந்த பின்னர் பலியானோர்களின் எண்ணிக்கை இல்லை என்றோ அல்லது மிகக் குறைவானது என்றோ கூறலாம். இக்காலப்பகுதியிலேயே நவீன கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. பலிகளுக்குள்ளும் இழப்புக்களுக்குள்ளும் இம்மக்கள் கடல் வழிப் போக்குவரத்தை தமது பிரதான போக்குவரத்தாகக் கொண்டனர்.
இவ்வாறு கடலில் சென்று வரும்போதும் அங்குள்ள காட்சிகளையும் கண்டு வரும்போதும் மனதுக்கு இனிமையாக இருப்பதுடன் சந்தோசத்தையும் கொடுத்துவந்தது. இதனால்தான் யுத்தத்தின் பின் இப்போக்குவரத்து மிகவும் முக்கியம் பெற்றதுடன் உல்லாசப்பயணிகளினாலும் பெரிதும் கவரப்பட்டது. இதனால் அதிக வருமானத்தை அரச நிறுவனங்கள் பெற்று வந்ததுடன் இது மூதூர் மக்களின் வாழ்வாதாரத்துறையினையும் வித்தியாசமான வழியில் முன்னேற்ற வாய்ப்பளித்தது.
தற்போது இப்படகு மற்றும் கப்பல் சேவைகள் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுள்ளது. இது பாரம்பரிய போக்குவரத்துச் சேவைக்கு ஓர் சமாதி கட்டுவது மாத்திரமின்றி மூதூரின் வருமானத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனை மீள சேவையில் ஈடுபடுத்தும் போது மக்களின் பொதுவாக மீனவச் சமூகத்தின் வருவாயில் மாற்றம் ஏற்படும் என்பது மாத்திரமின்றி உல்லாசப்பயனத்துறையின் வளர்ச்சியிலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
நன்றி: முத்தூரான் பாயிஸ்

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.