Skip to main content

வேப்பமரம்

வேப்பமரம் (வேம்பு) இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. தற்போது உலகின் தென் கிழக்கு ஆசியா, அந்தமான், பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியாவின் வெப்பப்பகுதி மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இது வளர்க்கப்படுகிறது. இம்மரம் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் வளர்கின்றன. இம்மரம் களிமண், கரிசல் மண் நிலங்களில் வளர்ந்தாலும் மண் ஆழமில்லாத நிலங்கள், சரளை நிலங்கள் மற்றும் உவர் நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. களர் நிலங்களிலும் வளரும். ஆனால், நீர் தேங்கி நிற்கும் பகுதி மற்றும் பனிப்பிரதேசத்தில் சரியாக வளர்வதில்லை.
      
வேப்ப மரம் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். வறட்சி பகுதிகளில் இலைகள் உதிர்ந்து கோடைக்காலத்தில் புதிய தளிர்களுடன் காட்சியளிக்கும். இது 40- 50 அடி உயரம் வரை வளரக்கூடிய ஒரு பெரிய மரமாகும். இதன் அடிமரம் நேராகவும், பருத்தும் இருப்பதுடன் குடை போன்ற கிளை மற்றும் உச்சி அமைப்பைக் கொண்டது. இது ஆழமான வேர் அமைப்பைக் கொண்டதால் எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரும் சிறப்பியல்பைக் கொண்டது. மேலும் இது வெட்ட வெட்ட தழைக்கும் தன்மைக் கொண்டதால் சமூக நலக்காடு வளர்ப்புத் திட்டத்தில் இதனைப் பெருவாரியாக பயன்படுத்தி பலனடையலாம்.
      
வேம்பு, வீடு கட்டுமான பொருட்களும், கலப்பை போன்ற விவசாய கருவிகளுக்கும், இருக்கைகள் செய்வதற்கும், பலகைகள் செய்யவும் உதவுகிறது. மர வேலைப்பாடுகளுக்கும் ஏற்றது.
      
வறட்சிப் பகுதிகளில் கால்நடைகளுக்கு இது ஒரு சிறந்த பசுந்தீவனமாக பயன்படுகிறது. 25 உயரமுள்ள ஒரு நடுத்தர மரம் ஆண்டுக்கு 350 கிலோ அளவிற்கு இலைகளைக் கொடுக்க வல்லது. இலையில் புரதச் சத்தும், தாது உப்புக்களும் மருத்துவப் பொருட்களும் உள்ளது. சிறந்த பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது. இதனுடைய இலைகள் காற்றை சுத்திகரிக்கவும், சத்தத்தைக் கட்டுப்படுத்தவும் கோடையில் நல்ல சுகாதாரமான நிழலைத் தரவும் உதவுகிறது. இது ஜனவரி முதல் மே மாதம் வரை பூத்துக் குலுங்கும். இடத்திற்கு இடம் பூக்கும் பருவம் மாறுபடலாம்.

ஒரு மரத்திலிருந்து 3.7 முதல் 55 கிலோ பழமும், அவற்றிலிருந்து 40 சதவீத அளவிற்கு விதையும் (கொட்டை) அக்கொட்டையிலிருந்து 45 சதவீத அளவில் எண்ணையும் கிடைக்கும். எண்ணை எடுத்தபின் பிண்ணாக்கு கிடைக்கிறது. இது சிறந்த உரமாக பயன்படுகிறது. வேப்ப எண்ணெய் சோப்பு தயாரிக்கவும் அதனை சுத்திகரித்து மருந்துகள் செய்யவும் பயன்படுகிறது. எனவே, இது ஒரு சிறந்த பலன் தரக்கூடிய அரும்பெரும் மரமாகும். வேப்ப விதைகளின் முளைப்பு திறன் 2 முதல் 3 வாரங்களுக்குத்தான் இருக்கும். அதன் பின் சரியாக முளைப்பதில்லை. விதைகளைச் சேகரித்தவுடன் விதைத்துவிட வேண்டும்.

வளர்ந்த நாற்றுகளை நட்ட 6 - 7 ஆண்டுகளில் பூத்து காய்க்க ஆரம்பித்து விடும். 10 வது ஆண்டிலிருந்து அதிக அளவில் சீரான மகசூல் பெற முடியும். சராசரியாக ஒரு மரத்திலிருந்து 50 கிலோ அளவில் பழமும் 20 கிலோ விதையும் கிடைக்கும். எவ்வளவு கடுமையான வறட்சியினாலும் எங்கும் பச்சையைப் பார்க்க முடியாத நிலையிலும் இம்மரம் பசுமையாக நின்று நல்ல நிழலும், பசுந்தீவனமும் தருவதுடன் ஒரு மரத்திலிருந்து சுமாராக 20 கிலோ விதையினையும் தரவல்லது.

நன்றி : அமுதம் தகவல் 

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.