Skip to main content

மூதூர் கடலில் மூழ்கி மரணித்தோர் விபரம்



மூதூர் கபீப் நகர் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற 3 பேர் மரணமான சம்பவம் மூதூரை மிகுந்த கவலைக்குள்ளக்கியது. நோன்புடன் இவ்மூவரும் கடல் குளிக்கும் போது தூரத்தில் தெரிந்த வலைக்கம்பை பிடித்திவிட்டு திரும்பும்  போது இச்சம்பவம் நடந்திருக்கலாம் என பலரது அபிப்பிராயம். இதில் ஜாயா வீதி , மூதூர் .04 எனும் விலாசத்தில் வசிப்பவரும் ஹபீப் நகர் பகுதியில் திருமணம் முடித்தவருமான ஜுனைத் ஷஹி (29 வயது) என்பவரும் முஹம்மது லாபிர்  ரிஜான் என்பவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் (இவர்கள் மூதூர் சலித் மௌலவி (நத்வி) அவர்களின் ஓன்று விட்ட சகோதரர்கள் ) மற்றவர் அனைச்சேனையை சேர்ந்த சமூர்த்தி உத்தியோகத்தர் நசீரின் மகன் இர்பான்.

வியாழக் கிழமை பி.ப. 5.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தின் உடனே ஷஹீயின் மையத்தை வைத்தியசாலைக்கு கொண்டு வந்தும் இரவு 8.30 மணி வரை மையத்தை பெற்றுக் கொள்ளமுடியாது போனதை இட்டு பொதுமக்கள் வைத்தியர் Dr. பிரேம் MS மீது விசனம் தெரிவித்தனர். அவரை அணுகியபோது அவர், தான் 6.20 pm மணிக்கு திடீர் மரண விசாரணை அதிகாரியான லாபீர் JP இன் அறிக்கை பெற்று மையத்தை வழங்குமாறு பணித்ததாகவும் அதனை அறிக்கை புத்தகத்தில் எழுதிவிட்டு நனிப்பட்ட விடயம்மாக வெளியே சென்றதாகவும் கூறினார். இருப்பினும் எமது மூதூர் நியூஸ் நிருபர் அங்கு 7.00 pm தொடக்கம் 8.45 pm வரை அங்கு இருந்த நேரம் வரை அங்கு உரிய வைத்தியரோ அல்லது திடீர் மரண விசாரணை அதிகாரியோ வைத்திய சாலை எல்லைக்குள் இல்லை என்பது உறுதி. இதே சம்பவம் அடுத்த நாள் மையத்தை வெளியில் எடுக்கும் போதும் நடந்துள்ளது. மூன்றாம் மையத்தை பொதுமக்கள் வைத்தியசாலிக்கு கொண்டு செல்ல அனுமதிக்காது கடற்கரையில் வைத்து போலீஸ் மூலம் பாரம் எடுத்துள்ளனர்.

பொது மக்களுக்காக சேவை செய்யும் அதிகாரிகள் பிரச்சனை இல்லாத விடயத்தில் சட்டங்களைக்காட்டி பொதுமக்களைப் பயமுறுத்தி அவர்களை அளக்களித்தல் கூடாது என்பதுடன் உரிய நேரத்தில் அக்கடமைகளை முடித்துக்கொடுக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

ஜலசமாதியான மூதூர் மக்களின் நினைவுகளும் சமாதியான படகுச் சேவையும்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012 22:47 கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியாரக் குடா கடலின் தெற்கே அமைந்துள்ள மூதூர், மகாவெலி கங்கையின் சங்கமத்தில் தோல்கொடுத்து நிற்கும் மிக முக்கியமான முதுமை ஊராகும். 1658 இல் வெள்ளையர்களின் கப்பலின் மாலுமியாக இருந்த ரொபட் நொக்ஸ் மூதூர் வழியாக தப்பிச் செல்லும் போது அங்கு அவர் கண்டதாக கூறுபவர்கள், அதற்கும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இருந்தே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது வரலாறு. இவர்கள் திருகோணமலை நகருடன் தங்களின் அன்றாட மற்றும் வர்த்தகத் தொடர்புகளை பேனிவந்துள்ளனர். அன்றிலிருந்து A15 பாதை திறக்கும் வரை மூதூர் மக்களின் பிரதான போக்குவரத்து, கடல் மார்க்கமாகவே காணப்பட்டுள்ளது. மாரி, சித்திரை, பௌர்னமி, அமாவாசை என்ற ஒவ்வொரு கடல்கொந்தளிப்புகளுக்கும் மத்தியில் இம்மக்கள் தமது போக்குவரத்தை வத்தை, பாய்க்கப்பல், வெளி இயந்திர சிறிய படகு, இயந்திரப்படகு, கப்பல் என்று நவீன காலம் வரை தமது போக்குவரத்து வாகனத்தை மாற்றியமைத்து, பிரயாணம் செய்ததே தவிர போக்குவரத்து வழிகளை ...