Skip to main content

மூதூர் கடலில் மூழ்கி மரணித்தோர் விபரம்



மூதூர் கபீப் நகர் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற 3 பேர் மரணமான சம்பவம் மூதூரை மிகுந்த கவலைக்குள்ளக்கியது. நோன்புடன் இவ்மூவரும் கடல் குளிக்கும் போது தூரத்தில் தெரிந்த வலைக்கம்பை பிடித்திவிட்டு திரும்பும்  போது இச்சம்பவம் நடந்திருக்கலாம் என பலரது அபிப்பிராயம். இதில் ஜாயா வீதி , மூதூர் .04 எனும் விலாசத்தில் வசிப்பவரும் ஹபீப் நகர் பகுதியில் திருமணம் முடித்தவருமான ஜுனைத் ஷஹி (29 வயது) என்பவரும் முஹம்மது லாபிர்  ரிஜான் என்பவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் (இவர்கள் மூதூர் சலித் மௌலவி (நத்வி) அவர்களின் ஓன்று விட்ட சகோதரர்கள் ) மற்றவர் அனைச்சேனையை சேர்ந்த சமூர்த்தி உத்தியோகத்தர் நசீரின் மகன் இர்பான்.

வியாழக் கிழமை பி.ப. 5.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தின் உடனே ஷஹீயின் மையத்தை வைத்தியசாலைக்கு கொண்டு வந்தும் இரவு 8.30 மணி வரை மையத்தை பெற்றுக் கொள்ளமுடியாது போனதை இட்டு பொதுமக்கள் வைத்தியர் Dr. பிரேம் MS மீது விசனம் தெரிவித்தனர். அவரை அணுகியபோது அவர், தான் 6.20 pm மணிக்கு திடீர் மரண விசாரணை அதிகாரியான லாபீர் JP இன் அறிக்கை பெற்று மையத்தை வழங்குமாறு பணித்ததாகவும் அதனை அறிக்கை புத்தகத்தில் எழுதிவிட்டு நனிப்பட்ட விடயம்மாக வெளியே சென்றதாகவும் கூறினார். இருப்பினும் எமது மூதூர் நியூஸ் நிருபர் அங்கு 7.00 pm தொடக்கம் 8.45 pm வரை அங்கு இருந்த நேரம் வரை அங்கு உரிய வைத்தியரோ அல்லது திடீர் மரண விசாரணை அதிகாரியோ வைத்திய சாலை எல்லைக்குள் இல்லை என்பது உறுதி. இதே சம்பவம் அடுத்த நாள் மையத்தை வெளியில் எடுக்கும் போதும் நடந்துள்ளது. மூன்றாம் மையத்தை பொதுமக்கள் வைத்தியசாலிக்கு கொண்டு செல்ல அனுமதிக்காது கடற்கரையில் வைத்து போலீஸ் மூலம் பாரம் எடுத்துள்ளனர்.

பொது மக்களுக்காக சேவை செய்யும் அதிகாரிகள் பிரச்சனை இல்லாத விடயத்தில் சட்டங்களைக்காட்டி பொதுமக்களைப் பயமுறுத்தி அவர்களை அளக்களித்தல் கூடாது என்பதுடன் உரிய நேரத்தில் அக்கடமைகளை முடித்துக்கொடுக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.