Skip to main content

கொழும்பு மகாபோதி பௌத்த விகாரையில் இfப்தார்

தெஹிவளை கல்கிசை விசேட செய்தியாளர் :கொழும்பில் பிரபல மகாபோதி பௌத்த விகாரைக்கு முஸ்லிம் அரசியலவாதிகள், புத்திஜீவிகள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலா பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்து நோன்பு திறப்பதற்கு பௌத்த தேரர்கள் முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நோன்பு திறப்பின்போது அவ் விகாரையில் அதான்(பாங்கு) ஒலித்து தொழுகை நடத்துவதற்கும், நோன்பு திறப்பதற்கான சிற்றுண்டிகள் மற்றும் கஞ்சி தயாரித்து வழங்குவதற்கும் தேரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந் நிகழ்வினை நோன்பு நடுப்பகுதியில் நடாத்துவதற்கும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நோன்புப் பெருநாள் அடுத்த தினத்தில் பிரபல பௌத்த தேரர்களுக்கு கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பகல் உணவு வழங்குவதற்கு முஸ்லிம் அமைப்பொன்று அழைப்பு விடுத்துள்ளது.
மேற்படி அழைப்புக்கள் மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தில் நேற்று(21) நடைபெற்ற பௌத்தம் இஸ்லாம் நட்புறவு அமைப்பின் கூட்டத்திலேயே விடுக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு முன்னாள் அமைச்சரும் இஸ்லாமிய நிலையத்தின் இணைத் தலைவருமான எம்.எச்.முஹம்மத் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தர்கலாநிதி கம்புறுகமகே தேரர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முஸ்லிம் மற்றும் பெளத்த அமைப்புகளின் செயலாளர்களான சீலா விக்கிரம , சாஹுல் ஹமீத் முஹமத் மற்றும் உறுப்பினர்கள், ஐனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாச, பானலகல தேரர் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இவ் கூட்டமைப்பு தம்புள்ள மற்றும் தெஹிவளை பள்ளிவாசல்களில் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகே உறுவாக்கப்பட்டது. நேற்று இடம்பெற்ற அமர்வில் அமைப்பின் கொள்கைகள் மற்றும் பௌத்தம் இஸ்லாம் மதங்கள் பற்றிய இலங்கையில் புரிந்துணர்வு, மதங்களுக்கிடையே பிரச்சினைகள் நடைபெறாமல் பாதுகாத்தல், பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தல் போன்ற வழிமுறைகள் ஆராயப் பட்டது .
கடந்த மாதாத்தில் நான்கு சுற்று கூட்டங்கள் முன்னாள் அமைச்சர் எம்.எச்.முஹம்மத் தலைமையில் நடைபெற்றுள்ளது.எதிர்வரும் மாதத்தில் ஐனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரை சந்தித்து இவ் அமைப்பு பற்றி அவர்களுக்கு விளக்கமளிப்பதாகவும் இக்கூட்டத்தில் தீர்மாணம் எடுக்கப்பட்டது.
அத்துடன் இவ் அமைப்பின் தீர்மாணங்கள் சட்ட திட்டங்களுகளும் ஐனாதிபதிக்கும் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இணைச் செயலாளர் சாஹுல் ஹமீத் முஹம்மத் தெரிவித்தார் .

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.