Skip to main content

கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்கு 9 தமிழ், முஸ்லிம் அறிஞர்கள் தெரிவு

கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்காக ஒன்பது தமிழ் மற்றும் முஸ்லிம் அறிஞர்களை கிழக்கு மாகாணக்கல்வி மற்றும் பணிப்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவு செய்துள்ளது.

இவர்களின் பெயர்களை உத்தியோகபூர்வமாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.டபிள்யு.டி.வெலிக்கல இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

கணபதிப்பிள்ளை பாக்கியராசா (துறைநீலாவணை), ஆறுமுகம் தங்கராசா (ஆரையம்பதி), கணபதிப்பிள்ளை சபாரத்தினம் (ஆரையம்பதி), பேரம்பலம் கனகரத்தினம் (திருகோணமலை), வேலுப்பிள்ளை நாகராசா சந்திரகாந்தி (திருகோணமலை), கோஸ் முகமது அப்துல் அஸீஸ் (சாய்ந்தமருது), முகம்மது ஹனிபா முகம்மது புகாரி (காத்தான்குடி), பக்கீர் முகையிதீன் கலந்தர்லெவ்வை (அட்டாளைச்சேனை), அப்துல் மஜீத் முகம்மது அலி (கிண்ணியா) ஆகியோர் இலக்கியம், சிறுகதை, கவிதை கலைத்துறை மற்றும் பல்துறை ஆகியவற்றில் ஆக்கப்பணி புரிந்தமைக்காக முதலமைச்சர் விருதுக்கு தெரிவு செய்யபட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிர்வருகின்ற அக்டோர் 18ஆம் திகதி திருகோணமலையில் விவேகானந்தா கல்லூரியில் நடத்தப்படவுள்ள 2012ஆம் ஆண்டுக்குரிய மாகாண கலை இலக்கிய விழாவில் இவர்கள் முதலமைச்சர் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர்.

இவ்விழாவில் முதன்மை அதிதிகளாக மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரமாவும் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தும் பங்குபற்றுவர்.

Comments

Popular posts from this blog

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

ஜலசமாதியான மூதூர் மக்களின் நினைவுகளும் சமாதியான படகுச் சேவையும்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012 22:47 கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியாரக் குடா கடலின் தெற்கே அமைந்துள்ள மூதூர், மகாவெலி கங்கையின் சங்கமத்தில் தோல்கொடுத்து நிற்கும் மிக முக்கியமான முதுமை ஊராகும். 1658 இல் வெள்ளையர்களின் கப்பலின் மாலுமியாக இருந்த ரொபட் நொக்ஸ் மூதூர் வழியாக தப்பிச் செல்லும் போது அங்கு அவர் கண்டதாக கூறுபவர்கள், அதற்கும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இருந்தே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது வரலாறு. இவர்கள் திருகோணமலை நகருடன் தங்களின் அன்றாட மற்றும் வர்த்தகத் தொடர்புகளை பேனிவந்துள்ளனர். அன்றிலிருந்து A15 பாதை திறக்கும் வரை மூதூர் மக்களின் பிரதான போக்குவரத்து, கடல் மார்க்கமாகவே காணப்பட்டுள்ளது. மாரி, சித்திரை, பௌர்னமி, அமாவாசை என்ற ஒவ்வொரு கடல்கொந்தளிப்புகளுக்கும் மத்தியில் இம்மக்கள் தமது போக்குவரத்தை வத்தை, பாய்க்கப்பல், வெளி இயந்திர சிறிய படகு, இயந்திரப்படகு, கப்பல் என்று நவீன காலம் வரை தமது போக்குவரத்து வாகனத்தை மாற்றியமைத்து, பிரயாணம் செய்ததே தவிர போக்குவரத்து வழிகளை ...