Skip to main content

கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்கு 9 தமிழ், முஸ்லிம் அறிஞர்கள் தெரிவு

கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்காக ஒன்பது தமிழ் மற்றும் முஸ்லிம் அறிஞர்களை கிழக்கு மாகாணக்கல்வி மற்றும் பணிப்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவு செய்துள்ளது.

இவர்களின் பெயர்களை உத்தியோகபூர்வமாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.டபிள்யு.டி.வெலிக்கல இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

கணபதிப்பிள்ளை பாக்கியராசா (துறைநீலாவணை), ஆறுமுகம் தங்கராசா (ஆரையம்பதி), கணபதிப்பிள்ளை சபாரத்தினம் (ஆரையம்பதி), பேரம்பலம் கனகரத்தினம் (திருகோணமலை), வேலுப்பிள்ளை நாகராசா சந்திரகாந்தி (திருகோணமலை), கோஸ் முகமது அப்துல் அஸீஸ் (சாய்ந்தமருது), முகம்மது ஹனிபா முகம்மது புகாரி (காத்தான்குடி), பக்கீர் முகையிதீன் கலந்தர்லெவ்வை (அட்டாளைச்சேனை), அப்துல் மஜீத் முகம்மது அலி (கிண்ணியா) ஆகியோர் இலக்கியம், சிறுகதை, கவிதை கலைத்துறை மற்றும் பல்துறை ஆகியவற்றில் ஆக்கப்பணி புரிந்தமைக்காக முதலமைச்சர் விருதுக்கு தெரிவு செய்யபட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிர்வருகின்ற அக்டோர் 18ஆம் திகதி திருகோணமலையில் விவேகானந்தா கல்லூரியில் நடத்தப்படவுள்ள 2012ஆம் ஆண்டுக்குரிய மாகாண கலை இலக்கிய விழாவில் இவர்கள் முதலமைச்சர் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர்.

இவ்விழாவில் முதன்மை அதிதிகளாக மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரமாவும் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தும் பங்குபற்றுவர்.

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.