Skip to main content

வெள்ளிக்கிழமையன்று அரபா நோன்பு நோற்கும்படி அகில இலங்கை உலமா கவுன்;சில் வேண்டிக்கொண்டுள்ளது

வெள்ளிக்கிழமை அறபாவில் ஹாஜிகள் கூடுவதால் அன்றைய தினமே அறபா தினம் என்பதால் எதிர் வரும் வெள்ளிக்கிழமையன்று அரபா நோன்பு நோற்கும்படியும் திங்கட்கிழமை பெருநாளை எடுக்கும்படியும் அகில இலங்கை உலமா கவுன்;சில் 
வேண்டிக்கொண்டுள்ளது. இது பற்றி உலமா கவுன்;சில் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்; மதனி  தெரிவித்திருப்பதாவது, 
அறபா என்பது மக்காவில் உள்ள இடத்தின் பெயராகும். வருடத்தில் ஒரு நாள் மட்டுமே ஹாஜிகள் அறபா என்ற இடத்தில் கூடுவதால் அந்த நாளைக்கே அறபா தினம் எனப்படும். அத்தகைய அறபா தினத்தில் நோன்பு நோற்கும்படி முழு உலக முஸ்லிம்களையும் நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதன்படிடி எதிர் வரும் வெள்ளிக்கிழமை ஹாஜிகள் அறபாவில் கூடுவதால் அந்நாளில் மட்டும் அறபா நோன்பு பிடிப்பதே சுன்னத்தானதாகும். அதனை விடுத்து அடுத்த நாட்கள் அய்யாமுத்தஷ்ரீக்குடைய நாள் என்பதால் அந்நாட்களில் நோன்பு பிடிப்பது ஹறாமானதாகும்.
ஒரு காலத்தில் அறபாவில் ஹாஜிகள் கூடும் தினம் எப்போது என்பது உலகின் ஏனைய நாடுகளில் உள்ள மக்களால் தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. இதன் காரணமாக அவர்கள் தமது ஊர்களில் காணும்; பிறையை வைத்து இதுதான் அறபா தினமாக இருக்கும் என்ற அணுமானத்தின் அடிப்பைடையில் அறபா நாளையும் ஹஜ் பெருநாளையும் எடுத்து வந்தர்கள். அன்றைய இந்த நிலை தவறில்லை. பின்னர் வானொலி கண்டு பிடிக்கப்பட்ட பின் ஊர் என்ற எல்லைக்குள் இருந்த இது விடயம் நாடு என்ற வரையறைக்குள் வந்தது. இப்போது இணையத்தளம், செய்மதி, ஸ்கைப் என தொழில் நுட்பம் முன்Nனேறி விட்டதாலும் அறபா நாள் எப்போது என்பது இப்போதே சகலருக்கும் தெரியும் என்பதாலும் அறபாவில் ஹாஜிகள் கூடுவதை உலகின் எந்த மூலையில் இருக்கும் மனிதனாலும் நேரடியாக காண முடியும என்பதாலும் அந்த வகையில் அரபாவில் முஸ்லிம்கள் கூடும் தினத்தில் அறபா நோன்பு நோற்கப்பட வேண்டும். அல்லாமல் நமது நாட்டில் தாமதமாதக கண்ட பிiயை வைத்து வேறு தினங்களில் அறபா நோன்பு நோற்பது தெரிந்து உண்மையை கொண்டே வேண்டுமென்று செய்யும் பாவத்தை உருவாக்கும்.
சூரிய கணக்குப்படி உலகம் முழுவதும் ஒநேரநாள் ஒரே திகதியாகும். அதே போல் சந்திர கணக்கப்படி உலகம் முழுவதும் ஒரே நாளில் பௌர்ணமி வருகிறது. ஆனால் சந்திர கணக்குப்படி சஊதியில் 7ம் திகதி என்பது இலங்கை முஸ்லிம்களிடத்தில் 5ம் திகதி என்பது உலக மு;லிம்களை பார்த்து எள்ளி நகையாடுவதாக உள்ளது.
அத்துடன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறையை கண்டு நோன்பு பிடியுங்கள் பிறை கண்டு விடுங்கள் என தனி ஒரு ஊருக்கோ அல்லது நாட்டுக்கோ சொல்லவில்லை. மாறாக முழு உலக முஸ்லிம்களுக்கே கட்டளையிட்டுள்ளதன் மூலம் இன்றைய நமது சூழலுக்கும் எற்றவாறு அவர்கள் இவ்வாறு கூறியுள்ளதை காணலாம். அதன்படி உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லாவான மக்கா பிறையை தொடர்வதே நபியின் பொதுவான வார்த்தையிலிருந்து பெறும் வழிகாட்டலாகும்.
ஆகவே வெள்ளிக்கிழமை அறபா நாள் என்பதால் அந்நாளில் அறபா நோன்பு நோற்கும்படியும், பெருநாளை பிற்படுத்துவது பாவம் இல்லை என்பதால் நமது நாட்டு முஸ்லிம்களின் ஒற்றுமை கருதி ஹஜ் பெருநாளை உலமா சபையின் கூற்றுக்கமைய திங்கட்கிழமை கொண்டாடும்படியும் இலங்கை முஸ்லிம்களை அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.