Skip to main content

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கண்மூடித்தனமான செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாடு.




-றியாஸ் ஆதம் : For Madawala News

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கண்மூடித்தனமான செயற்பாடுகள் குறித்து சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளத்தினூடாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் அழைக்கப்படாமல் புறக்கனிக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்புக்கள் கிடைப்பதில்லை இதுதொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்ற போது அந்தந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு என்னைப்போன்ற ஏனைய ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களை அழைக்க வேண்டாமென முதலமைச்சர் உத்தரவிடுவதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வாறான முதலமைச்சரின் செயற்பாடுகளை தான் வன்மையாகக் கன்டிக்கின்றேன்.

குறிப்பாக நான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவிருந்த போது ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி அந்த வைத்தியசாலைக்கு மகப்பேற்று விடுதிக் கட்டடமொன்றினை நிர்மாணிப்பதற்காக சுமார் ஒன்பது மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தேன் தற்போது அந்த நிதியின் ஊடாக விடுதிக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இத்தருவாயில் அவ்வைத்தியசாலைக்கு அண்மையில் விஜயம் செய்த முதலமைச்சர் அவ்விடுதிக் கட்டடத்தினை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாகாணசபை உறுப்பினரான என்னை அந்நிகழ்விற்கு அழைக்கக்கூடாது எனவும் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

அதேபோன்றுதான் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தினால் அண்மையில் நடாத்;தப்பட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திற்கும் மக்கள் பிரதிநிதியான எனக்கு அழைப்பு விடுக்க வேண்டாமெனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

குறிப்பாக ஏறாவூர் வைத்தியசாலையினை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்வதிலும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தினை உருவாக்கி அதனுடைய பணிமனையை ஏறாவூறுக்கு கொண்டுவந்து பல்வேறு பணிகளைச் செய்த பெருமையும் என்னையே சாரும் இவ்வாறு ஏறாவூர் மண்ணில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டவனும் நானே.

இவ்வாறு பல பணிகளை செய்த என்னால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முடிவுற்ற அபிவிருத்திப் பணிகளை திறந்து வைப்பதற்கு ஆர்வம் காட்டும் முதலமைச்சர் எனக்கு அழைப்பு விடுக்கக்கூடாது எனக்கூறுவது அவரின் அரசியல் வங்குரோத்து நிலைமையினையே வெளிக்காட்டுகிறது தன்னுடைய ஆளுமையினால் எந்தவொரு அபிவிருத்திப்பணிகளையும் முன்னெடுக்க முடியாமல் தத்தளிக்கும் முதலமைச்சர் கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளை திறந்து வைத்து தன்னால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகள் போல் சித்தரிக்க முற்படுவது அவரின் இயலாமையினை வெளிக்காட்டுகின்றது இவ்வாறான கோமாளி அரசியலை நான் ஒருபோதும் செய்யப்போவதில்லை இவர்களின் இவ்வாறான மாயைகளை மக்கள் நன்கு விளங்கி வைத்துள்ளனர். ஆகவே இனி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முடியாது.

கடந்த காலங்களில் இந்த முதலமைச்சர் மாகாண விவசாய மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தபோது இருநூறுக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வந்து பெரும் மாநாடுகளை எல்லாம் நடாத்தி கிழக்கில் வெளிநாட்டு முதலீட்டாளர்களினூடாக கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்யப்போவதாக சூழுரைத்தார். இறுதியில் நடந்தது என்ன ஒன்றுமே இல்லை அதே போன்றுதான் சுற்றுலாதுறையை அபிவிருத்தி செய்யப்போவதாக கூறி இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்போவதாகவும் கூறினார் இறுதியில் ஒன்றுமே நடைபெறவில்லை அந்த அமைச்சினுடைய பணங்களே வீனாக்கப்பட்டது.

அதேபோன்றுதான் தனது இயலாமையினை மூடிமறைப்பதற்காக தன்னைப்போன்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் முயற்ச்சியால் செய்யப்பட்ட அபிவிருத்தி பணிகளை அம்மாகாண சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல் முதலமைச்சர் திறந்துவைத்து இப்பிராந்தியத்தில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியையும், இக்கட்சிக்காக வாக்களித்த மக்களையும், இந்த நாட்டிலே நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு பாடுபட்ட எங்களையும் ஓரங்கட்ட முற்படுகின்றார். இதுதொடர்பில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம் பௌசி அவர்களினூடாக ஜனாதிபதி அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.