Skip to main content

(வீடியோ) முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த அசாத் சாலி தனக்கும் தனது குடுபத்துக்கும் துரோகம் இழைக்கமாட்டார் என நான் நம்பினேன் : கண்ணிருடன் மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார். ‪





நேற்று முன்தினம் மத்திய மாகாண சபை உறுப்பினர்  அசாத் சாலி நான்கு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரை  இலக்கம் பதினாறு நாவலை வீட்டில் தடுத்து வைத்திருப்பதாக கூறி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த அதேவேளை குறித்த பெண்மணியின் உறவினர்கள் சிலர் அசாத் சாலியின் வீட்டை சுற்றி வளைத்த சம்பவம் உடகங்களில் வெளியான நிலையில்,

அந்த வீட்டில் இருந்த குறித்த பெண்மணியை விசாரணைக்கு உற்படுத்திய போது அவர் தனது சொந்த விருப்பத்தில் அங்கு தங்கியிருப்பதாகவும் அவரை அங்கு எவரும்  தடுத்து வைக்கவோ கடத்திவரவோ இல்லை எனவும் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும்   குறித்த பெண்மணி தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மடவளை நியுசுக்கு தெரிவித்திருந்தது.


இது தொடர்பாக நேற்று ஹிரு தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்திருந்த அசாத் சாலி குறித்த பெண்மணியை தான் கடந்தவோ தடுத்து வைக்கவோ இல்லை  அவர் அவரது வீட்டை விட்டு சொந்த விருப்பத்தில்  வெளியேறியுள்ளதாக பொலிஸ் வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.


இந்த நிலையில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் உவைஸ் அவர்கள் இன்று கொழுப்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தார்

அங்கு  கருத்து வெளியிட்ட அவர் கடந்த இரண்டு வருடங்களாக   அசாத் சாலி  கண்டியில் தேர்தலில் போட்டியிட வந்ததான் பின்னர்  தன்னோடும் தான் குடுப்பத்தோடும் நெருங்கி பழகியதாகவும் அதனை பயன்படுத்தி கொண்டு தனது மனைவியுடன் முறையற்ற நட்பொன்றை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும்  தற்போது தனது மனைவியை அவரோடு வைத்துகொண்டுள்ளதாக குற்றம் சுமத்தியதுடன் குறித்த வீட்டை தான் தனது பிள்ளைகள் உறவினர்கள் அந்த வீட்டை சுற்றி வளைத்ததாகவும்   போலீசார் கடும் முயற்சி செய்தும் பல மணி நேரங்களுக்கு பின்னர் அந்த வீட்டில் தனது மனைவியை போலீசார் வெலிக்கடை போலிசுக்கு அழைத்துவந்தாக குறிப்பிட்ட அவர் தங்களோடு  அசாத் சாலியின் மகள் மற்றும் மனைவியும் இருந்தாக சுட்டிக்காட்டினார். 

அங்கு மேலும் கருத்துவெளியிட்ட அவர் ...
முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்த  அசாத் சாலி  தனக்கும் தனது குடுபத்துக்கும் துரோகம் இழைக்கமாட்டார் என தான் நம்பியதாக கண்ணிருடன் தெரிவித்த அவர் ஆசாத் சாலி பெண்களை மோசடி செய்யும் முதலாவது தடவை இதுவல்ல என குறிப்பிட்ட இதற்க்கு முன்னரும் முதல் மனைவியை வீட்டில் வைத்துகொண்டு ஒரு பெரும்பான்மை இன பெண்ணை திருமணம் செய்து பின்னர் அவர்  விவாகரத்து செய்துள்ளதாக சுட்டிக்கட்டுயுள்ளார்.
குறித்த ஊடக மாநாட்டில் கலந்துகொண்ட பொலிஸ் முறைப்பாட்டை செய்த உவைஸ் அவர்களின் மகன் மகன் ULFATH UWAIS  ஆசாத் சாலிக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள  பாதுக்காப்பு  உத்தியோகத்தர்கள் சம்பவ தினத்தில் தங்களை மிரட்டியதாகவும்  ஆசாத் சாலியின் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள  பாதுக்காப்பு  உத்தியோகத்தரே அவரது தாயை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தாகவும் இப்படியானவர்களுக்கு அரச பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்குவதை ஜனாதிபதி மற்றும் பிரதமர் விளக்கிகொள்ளவேண்டும் என கோரிக்கை முவைத்துள்ளர்.
குறித்த ஊடக மாநாட்டின் முழு விடியோவை விரைவில் எமது இணையதளத்தில் எதிர்பாருங்கள்...

Comments

Popular posts from this blog

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

ஜலசமாதியான மூதூர் மக்களின் நினைவுகளும் சமாதியான படகுச் சேவையும்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012 22:47 கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியாரக் குடா கடலின் தெற்கே அமைந்துள்ள மூதூர், மகாவெலி கங்கையின் சங்கமத்தில் தோல்கொடுத்து நிற்கும் மிக முக்கியமான முதுமை ஊராகும். 1658 இல் வெள்ளையர்களின் கப்பலின் மாலுமியாக இருந்த ரொபட் நொக்ஸ் மூதூர் வழியாக தப்பிச் செல்லும் போது அங்கு அவர் கண்டதாக கூறுபவர்கள், அதற்கும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இருந்தே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது வரலாறு. இவர்கள் திருகோணமலை நகருடன் தங்களின் அன்றாட மற்றும் வர்த்தகத் தொடர்புகளை பேனிவந்துள்ளனர். அன்றிலிருந்து A15 பாதை திறக்கும் வரை மூதூர் மக்களின் பிரதான போக்குவரத்து, கடல் மார்க்கமாகவே காணப்பட்டுள்ளது. மாரி, சித்திரை, பௌர்னமி, அமாவாசை என்ற ஒவ்வொரு கடல்கொந்தளிப்புகளுக்கும் மத்தியில் இம்மக்கள் தமது போக்குவரத்தை வத்தை, பாய்க்கப்பல், வெளி இயந்திர சிறிய படகு, இயந்திரப்படகு, கப்பல் என்று நவீன காலம் வரை தமது போக்குவரத்து வாகனத்தை மாற்றியமைத்து, பிரயாணம் செய்ததே தவிர போக்குவரத்து வழிகளை ...