Skip to main content

பாதுகாக்கப்பட வேண்டிய, சிறுவர் உரிமைகள்

(சமூகவியலாளர் : பகுர்டீன் இஸ்ஹாக்)
சமூகத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தவர்களும் தனக்கென பல்வேறு உரிமைகளைக் கொண்டிருப்பதைப் போல சமூகத்தின் முக்கிய அங்கத்தவர்களாகத் திகழும் சிறுவர்களும் தங்களுக்கென பல்வேறு உரிமைகளைக் கொண்டுள்ளனர். சமூகத்திலுள்ளஒவ்வொரு குடிமகனும் சிறுவர்களின் உரிமைகளை மதித்து அவைகளை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாட்டினைக் கொண்டுள்ளனர்.

சமூகத்தில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் சிறுவர் துஷ்பிரயோகம் பாரிய சவாலாகக் காணப்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் என்பது சிறுவர்களைத் தவறாக வழிநடத்தும் அனைத்து தவறுகளையும் குறிக்கும். அந்தவகையில் சிறுவர் துஷ்பிரயோகமானது ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக பல்வேறு சமூகவியலாளர்களால் நோக்கப்படுகின்றது. எனவே, சமூகமொன்றில் பாரிய சமூகப் பிரச்சினையாகக் காணப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படும் போது சிறுவர் உரிமையை பாதுகாக்க முடியும் என்பது பல்வேறு சமூகவியலாளர்களின் கருத்தாகும்

இன்றைய உலகம் எதிர்நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன்றாக சிறுவர் துஷ்பிரயோகம் விளங்குகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் போன்ற அனைத்து உலக நாடுகள் முழுவதிலும் காணப்படும் ஒரு சர்வதேசத்தின் கவனத்தையீர்த்த பிரச்சினையாக இருந்தாலும்கூட வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராக கருதப்படுகின்றனர். அத்தோடு சிறுவர்கள் மற்றவர்களில் தங்கி வாழ்கின்ற 
பலவீனர்களாக காணப்படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின்றன.

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் அவர்களால் பராமரிப்போரால் அல்லது பாதுகாவலர்களால் அல்லது சமூக அங்கத்தவர்களால் பாதிக்கப்படும் நிலையாகும். இதற்கமைய சிறுவர்கள் பல்வேறு வடிவங்களில் 
துஷ்பிரயோகங்களுக்கு உள்ளக்கபடுகின்றார்கள்.

1.   உடலியல் ரீதியான துஷ்பிரயோகம்.
2.   உளவியல் ரீதியான துஷ்பிரயோகம்.
3.   உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.
4.   புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்.

ஒரு குழந்தை மேற்கூறப்பட்ட துஷ்பிரயோகங்களின் வடிவில் ஒன்றின் மூலம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை மூலம் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் நிலைசிறுவர் துஷ்பிரயோகமாகும்.

சமூகமொன்றில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகமாக தலைவிரித்தாடுகின்றதென்றால் அச்சமூகத்தில் இயங்கும் சமூ நிறுவனங்கள் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தங்களது முழுமையாக பங்களிப்பினை வழங்கவில்லை என நவீன 
சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். அந்த அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் முயற்சியில்ஈடுபட்டாலும் சமூகத்தில் உள்ள சமூக நிறுவனங்களான குடும்பம், மத நிறுவனங்கள், கல்வி நிறுவங்கள், சமூக மையஒழுங்கமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் பல்வேறு பொறுப்புக்களையும் கடமைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

குடும்பம் ஒரு சமூதாயத்தில் அடிப்படைக் கூறாகும். சிறுவர்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்குமான செழிப்பான சூழல் குடும்பமாகும். ஒரு சிறுவனுக்கு குடும்பத்தின் மூலம் கிடைக்கும் அன்பு, ஆதரவு, பாதுகாப்பு சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் பாரிய பங்களிப்பைச் செய்கின்றது. மாறாக ஒரு சிறுவன் குடும்பத்தில் அன்பற்ற, ஆதரவற்ற, பாதுகாப்பற்ற நிலையில் வாழும் போது 
அச்சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகக்கூடிய அதிகமான சந்தர்ப்பங்கள் 
காணப்படுவதாக சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் ஆளுமை விருத்தி, அறிவு மற்றும் உள ரீதியான வளர்ச்சியை மேற்கொள்வதில் கல்வி நிறுவனங்கள் சமூகத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

பொதுவாக சிறுவர்கள் சமூகத்திலிருந்து அடையாளம், பாராட்டு, பாசம், பாதுகாப்பு போன்றவைகளை எதிர்பார்க்கின்றார்கள். மேலும்சிறுவர்கள் சமூகத்திலிருந்து எதை எதிர்பார்க்கின்றார்கள்இஎதை நிராகரிக்கின்றார்கள் என்பதை சமூகத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தவர்களும் புரிந்து சிறுவர்களின் அபிலாசைகள், உணர்வுகள் போன்றவைகளை மதித்து நடக்கும் போது சிறுவர் உரிமைகளை ஒரு சமூகத்தில் பாதுகாக்க முடியும்.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு சவாலாக உள்ள அதே வேளை சிறுவர்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படும் போது அவர்கள் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்றவகையில் அவர்களது எதிர்காலத்தை சிறப்பாகத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டியது ஒவ்வொரு சமூக நிறுவனங்களின் பொறுப்பாகும். இந்த நிலையில் இன்றைய நவீன சமுதாயத்தில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளும் படிப்படியாக அதிகரித்துச் செல்லும் நிலையையும் காணலாம்.

நவீன உலகில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பல்வெறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட அவற்றைத் தாண்டி சிறுவர் துஷ்பிரயோகம் முன்னேறிச்; செல்லும் சந்தர்ப்பங்களையும் அவதானிக்க முடியும். மேற்படி சிறுவர் துஷ்பிரயோகத்தை நீக்கி சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உலகில் பல அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள் பல ஏற்பாடுகளை மேற்கொள்வதினைக் காணலாம். இவ்வாறாக சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேற்கூறப்பட்ட சமூக நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் அவசியத்தை இன்றைய சமூகம் வேண்டி நிற்கின்றது.

சிறுவர் துஷ்பிரயோகத்தை இல்லாதொழித்து சிறுவர் உரிமையை பேணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர் தினம் சிறப்பாக ஒவ்வொரு ஒக்டோபர் 01ம் திகதி கொண்டாடப்படுகின்றன.

மேலும் சிறுவர் தினம் சம்பந்தமாக குறிப்பிட்ட திகத்தில் மாத்திரம் இவ்வாறான சிறுவர் உரிமையை பாதுகாப்பது தொடர்பான செயற்பாட்டினை வரையறை செய்யாமல் வருடத்தில் ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்து சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பினையும் கடமையினையும் சமூகத்தில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், சமூக மையஒழுங்கமைப்புக்கள் போன்றவை செயற்படுத்தும் போது சமூகத்தில் சிறுவர்கள் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களையும் ஒரு நாட்டின் அபிவிருத்தி பங்காளிகலாக்க முடியும்

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.