மூதூரிலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு செல்வதற்கு கடல்வழியே கதியென இருந்த மூதூர் மக்களுக்கு தற்போது இறால்குழி வழியாக A15 பாதை திறக்கப்பட்டு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே நேரம் கினாந்திமுனை, பச்சைநூர், கங்கை முறிவு வழியாக கிண்ணியா சூரங்கள் வந்தடையும் மற்றுமொரு பாதையும் திறக்கப்பட்டுள்ளது. இது மூதூர் மூன்றாம் கட்டை மலையடி சந்தியிலிருந்து சூராங்கல்லுக்கு சுமார் 13 KM தூரமாகும். தற்போது கொழும்பு செல்லும் வாகனங்கள் அதிகமாக இப்பாதையை பயன்படுத்துவதைக் காணலாம். இப்பாதை நிலவெளியிளிருந்து சம்பூர் வரை போடப்பட்ட மூதூருக்கு குறுக்காக உள்ள ஒரு புதிய பாதை. இப்பாதை போடப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துக்களும் நிகழ்ந்தாலும் மூதூர் மக்களுக்கு தற்காலிகமாக ஒரு பாதை என்ற ரீதியில் நன்மைபயக்கின்றது. இதன் பின்னணி தொடர்பில் என்ன சுத்துமாத்துக்கள் உ...