Skip to main content

Posts

Showing posts from February, 2011

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்வதில் சிரமம்

திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மூதூர், வெருகல் மற்றும் பிரதேச செயலாளர்  பிரிவுகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமங்கள்  எதிர் கொள்ளப்படுவதாக முறையிடப்படுகிறது. தரை வழிப்போக்குவரத்துக்களான கந்தளாய் மற்றும் இறால்குழி வழிகள் முடக்கப்பட்டதனால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து கடல் மார்க்கமாக மாத்திரமே உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் பயணிகள்  நோயாளர்கள் பயனத்திட்கு இவ்விடயம் இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் பற்றி கேட்டபோது திருகோணமலை மேலதிக அரச அதிபர் ஏ.நடராசா தெரிவித்தார் தற்சமயம் வெள்ளம்  நிலைமை குறைவடைந்த நிலையில் மக்கள் படிப்படியாக வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர் . இவர்களுக்கு உடைகள்இ பால்மா, பாத்திரங்கள் என  பல்வகை  தேவைகள் உள்ளன எனவும் மேலதிக அரச அதிபர் குறிப்பிட்டார் . இதேவேளை அல்லை-கந்தளாய் வீதி  வழியாக நான்கு சக்கர உருட்டும் சக்தி கொண்ட வாகனங்கள் மாத்திரம் நேற்றிலிருந்து பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்கள் மிகவேகமாக கனரக இயந்திரம...

மூதூர் பிரதேசத்திற்கு விசேட வைத்திய குழு

மூதூர் பகுதி முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடல் வழி போக்குவரத்தைத் தவிர ஏனைய அனைத்து போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டதால் மக்கள் பல்வேறு அசவ்கரியன்களை அனுபவித்து வருவதுடன் சுகாதார சீர்கேடுகளும் இடம்பெற்று உள்ளதை கவனத்தில் கொண்ட இலங்கை அரசு 10 பேர்கள் கொண்ட விசேட வைத்தியக்குழு ஒன்றை மூதூருக்கு அனுப்பிவைத்துள்ளது. இக்குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ வசதிகளை செய்து வருகின்றது. 

மூதூர் பிரதேசம் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது

திருகோணமலை மாவட்டத்தில் அடைமழை காரணமாக மூதூர் பிரதேசத்தில் உள்ள சகல கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்துக்கு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது மக்கள் வீடுகளை கைவிட்டும் இடம்பெயர்ந்து இருப்தாகவும் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களிலும் நேற்று வெள்ளம் புகுந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் மோசமாக மூதூர் பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது இதேவேளை திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களான கிண்ணியா, தம்பலகமம்,  நிலாவெளி, குச்சவெளி, திரியாய் ஆகியனவும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் தாழ்ந்த பகுதிகள் மூழ்கியுள்ளன