Skip to main content

Posts

Showing posts from July, 2012

மூதூர் கடலில் மூழ்கி மரணித்தோர் விபரம்

மூதூர் கபீப் நகர் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற 3 பேர் மரணமான சம்பவம் மூதூரை மிகுந்த கவலைக்குள்ளக்கியது. நோன்புடன் இவ்மூவரும் கடல் குளிக்கும் போது தூரத்தில் தெரிந்த வலைக்கம்பை பிடித்திவிட்டு திரும்பும்  போது இச்சம்பவம் நடந்திருக்கலாம் என பலரது அபிப்பிராயம். இதில் ஜாயா வீதி , மூதூர் .04 எனும் விலாசத்தில் வசிப்பவரும் ஹபீப் நகர் பகுதியில் திருமணம் முடித்தவருமான ஜுனைத் ஷஹி (29 வயது) என்பவரும் முஹம்மது லாபிர்  ரிஜான் என்பவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் (இவர்கள் மூதூர் சலித் மௌலவி (நத்வி) அவர்களின் ஓன்று விட்ட சகோதரர்கள் ) மற்றவர் அனைச்சேனையை சேர்ந்த சமூர்த்தி உத்தியோகத்தர் நசீரின் மகன் இர்பான். வியாழக் கிழமை பி.ப. 5.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தின் உடனே ஷஹீயின் மையத்தை வைத்தியசாலைக்கு கொண்டு வந்தும் இரவு 8.30 மணி வரை மையத்தை பெற்றுக் கொள்ளமுடியாது போனதை இட்டு பொதுமக்கள் வைத்தியர் Dr. பிரேம் MS மீது விசனம் தெரிவித்தனர். அவரை அணுகியபோது அவர், தான் 6.20 pm மணிக்கு திடீர் மரண விசாரணை அதிகாரியான லாபீர் JP இன் அறிக்கை பெற்று மையத்தை வழங்குமாறு பணித்ததாகவும் அதனை அறிக்க...

கிழக்குத் தேர்தலும் அதாவுல்லாவால் நின்றுபோன திருமணமும்!!

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2012 தாலி கட்டும் கடைசி நிமிடத்தில் - நின்று போகும் திருமணங்களை ஆகக்குறைந்தது திரைப்படங்களிலாவது நீங்கள் பார்த்திருப்பீர்கள்! நமது அரசியல் அரங்கிலும் அவ்வாறானதொரு காட்சியினை அண்மையில் காணக் கிடைத்தது! கிழக்கு மாகாணத் தேர்தலை முன்வைத்து மு.கா. - ஆளும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றுக்கிடையில் இடம்பெறவிருந்த 'திருமணமே' அதுவாகும்! 'பெண்' - 'மாப்பிள்ளை' தரப்பாருக்கிடையிலான 'கொடுக்கல் - வாங்கலில்' ஏற்பட்ட இழுபறியானது, கடைசியில் - திருமணத்தினையே பலி கொண்டு போயிற்று! இங்கு 'கொடுக்கல் - வாங்கல்' என்பது ஆசனப் பங்கீடு ஆகும்! கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் ஆளும் ஐ.ம.சு.முன்னணியோடு இணைந்துதான் மு.கா. போட்டியிடும் என்று கடைசிவரை நம்பப்பட்டது. வெற்றிலைச் சின்னத்தில் மு.கா.வுக்கான ஆசனப் பங்கீடு குறித்தும் முன்னதாக அறிவிக்கப்பட்டது. அப்படியிருந்தும், கடையில் அந்த கூட்டிணைவு சாத்தியமாகாமல் மு.கா. தனது மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. நிஜத்தைச் சொன்னால், மு.கா. தனித்துப் போட்டியிடும் முடிவோடு ...

கொழும்பு மகாபோதி பௌத்த விகாரையில் இfப்தார்

தெஹிவளை கல்கிசை விசேட செய்தியாளர் : கொழும்பில் பிரபல மகாபோதி பௌத்த விகாரைக்கு முஸ்லிம் அரசியலவாதிகள், புத்திஜீவிகள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலா பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்து நோன்பு திறப்பதற்கு பௌத்த தேரர்கள் முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நோன்பு திறப்பின்போது அவ் விகாரையில் அதான்(பாங்கு) ஒலித்து தொழுகை நடத்துவதற்கும், நோன்பு திறப்பதற்கான சிற்றுண்டிகள் மற்றும் கஞ்சி தயாரித்து வழங்குவதற்கும் தேரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந் நிகழ்வினை நோன்பு நடுப்பகுதியில் நடாத்துவதற்கும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நோன்புப் பெருநாள் அடுத்த தினத்தில் பிரபல பௌத்த தேரர்களுக்கு கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பகல் உணவு வழங்குவதற்கு முஸ்லிம் அமைப்பொன்று அழைப்பு விடுத்துள்ளது. மேற்படி அழைப்புக்கள் மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தில் நேற்று(21) நடைபெற்ற பௌத்தம் இஸ்லாம் நட்புறவு அமைப்பின் கூட்டத்திலேயே விடுக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு முன்னாள் அமைச்சரும் இஸ்லாமிய நிலையத்தின் இணைத் தலைவருமான எம்.எச்.முஹம்மத் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தர்கலாநிதி கம்புறுகமக...

வேப்பமரம்

வேப்பமரம் (வேம்பு) இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. தற்போது உலகின் தென் கிழக்கு ஆசியா, அந்தமான், பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியாவின் வெப்பப்பகுதி மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இது வளர்க்கப்படுகிறது. இம்மரம் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் வளர்கின்றன. இம்மரம் களிமண், கரிசல் மண் நிலங்களில் வளர்ந்தாலும் மண் ஆழமில்லாத நிலங்கள், சரளை நிலங்கள் மற்றும் உவர் நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. களர் நிலங்களிலும் வளரும். ஆனால், நீர் தேங்கி நிற்கும் பகுதி மற்றும் பனிப்பிரதேசத்தில் சரியாக வளர்வதில்லை.        வேப்ப மரம் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். வறட்சி பகுதிகளில் இலைகள் உதிர்ந்து கோடைக்காலத்தில் புதிய தளிர்களுடன் காட்சியளிக்கும். இது 40- 50 அடி உயரம் வரை வளரக்கூடிய ஒரு பெரிய மரமாகும். இதன் அடிமரம் நேராகவும், பருத்தும் இருப்பதுடன் குடை போன்ற கிளை மற்றும் உச்சி அமைப்பைக் கொண்டது. இது ஆழமான வேர் அமைப்பைக் கொண்டதால் எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரும் சிறப்பியல்பைக் கொண்டது. மேலும...