Skip to main content

Posts

முதலமைச்சர் பதவி குறித்து எனக்கு தெரியாது - அமீர் அலி

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியிருந்து நஜீப் ஏ. மஜீத்தை நீக்கிவிட்டு, முதலமைச்சராகும் வாய்ப்பு அமீர் அலிக்கு காணப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து தனக்கு எதுவுமே தெரியாதென கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார். இதுபற்றி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கருத்து வெளியிட்ட அமீர் அலி, நான் அமைச்சராக இருந்தபோதும் மாகாண சபை உறுப்பினராக இருக்கின்றபோதும் மக்களுக்காக எனது சேவைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மக்களுக்கான எனது சேவைகள் தொடரும். மக்கள் நலனுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். கிழக்கு மாகா ண முதலமைச்சராகும் வாய்ப்பு எனக்கு இருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. நான் அதனை ஊடகங்கள் மூலமே அறிந்துகொண்டடேன். கிழக்கு மாகாண சபையின் சகல உறுப்பினர்களுடனும் சுமூக உறவு உள்ளது. பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்படுகிறேன். கூட்டுப்பொறுப்புகளை கடைபிடிக்கிறேன் எனவும் அமீர் அலி மேலும் கூறினார். Posted in: செய்திகள் Email This BlogThis! Share to Twitter Share to Facebook

முஸ்லிம் சமூகத்திற்கு விசுவாசமானவர்களாக செயல்பட வேண்டும் - அப்துர் ரஹ்மான்

(பழுளுல்லாஹ் பர்ஹான்) நன்றி : ஜப்னா முஸ்லிம் வடமாகாண சபை தேர்தல் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரப் பிரச்சினை என்பவற்றை எவ்வாறு நோக்கும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஷூறா சபை உறுப்பினரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான், தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில், வட மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் சர்ச்சைக்குரிய இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. வடமாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படவே கூடாது என ஒரு தரப்பினர் கூறுகின்ற அதேவேளை இன்னுமொரு தரப்பினரோ தேர்தல் நடாத்தப்படும் பட்சத்தில் அச் சபைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களே வழங்கப்பட வேண்மென கூறுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் வடமாகாண சபைத் தேர்தலை நடாத்துவது என்பது தமிழ் சமூகத்திற்கு அரசாங்கமோ அல்லது வேறு எவருமோ கருணையின் அடிப்படையில் செய்யும் காரியமல்ல. மாறாக, அது அரசாங்கத்தினது மாத்திரமன்றி முழு தேசத்தினதும் கடமையாகும். ஏனெனில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முயல்கிறோமே தவிர, அதிகாரப...

கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை தீர்மானங்களை வெளியிட்டார் உதுமாலெப்பை

வெள்ளிக்கிழமை, 19 ஒக்டோபர் 2012 23:54 (எம்.பரீத்) கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை கூட்டம் கடந்த 17ஆம் திகதி கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட தீர்மானங்களை - கிழக்கு மாகாணசபை அமைச்சரவையின் பேச்சாளரும், வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிட்டார். அத்தீர்மானங்களின் விபரங்கள் வருமாறு: 1. திருகோணமலை பொது வைத்தியசாலை - மாகாண சுகாதார அமைச்சினால் இற்றைவரை நிருவகிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரமான திருகோணமலை நகரில் அமைந்துள்ள இவ்வைத்தியசாலை, திருகோணமலை மாவட்டத்தின் மக்களின் நன்மைகருதி எதிர்காலத்தில் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் இதன் நிருவாகத்தை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் நிருவாகத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 2. கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்...

கிணறுகளுக்கு வரி

வெள்ளிக்கிழமை, 19 ஒக்டோபர் 2012 13:20 சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் சமர்ப்பிக்கப்படும் என நீர்வளசபையின் தலைவர் பந்துல முனசிங்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நீர்வளசபை சட்டத்திற்கு திருத்தங்கள் பல கொண்டுவரப்படவுள்ளன. இதன்படி 12 அடிக்கு கூடிய விட்டமுள்ள கிணறு தோண்டுவதற்கு முன் அனுமதி பெறவேண்டியிருக்கும். குடிநீரை போத்தலில் அடைக்கும் நிறுவனங்கள் அவை பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப நீர்வளசபைக்கு காப்புரிமை பணம் செலுத்தவேண்டும். குழாய் கிணறு அமைக்கும் நிறுவனங்கள் பதிவுக் கட்டணமாக 15,000 ரூபாவும் அதை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்காக 10,000 ரூபாவும் கட்டவேண்டும். ஆறுகள், குளங்கள், அருவிகள், வாய்க்கால்கள், நிலவடிநீர் என்பவற்றை மாசடையாது பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும். அடுத்த 40, 50 வருடங்களில் சுத்தமான நீர் மிகவும் பெறுமதி வாய்ந்ததாகவும் அருமையானதாகவும் ஆகிவிடும். க...
கிணறுகளுக்கு வரி வெள்ளிக்கிழமை, 19 ஒக்டோபர் 2012 13:20 1 COMMENTS சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் சமர்ப்பிக்கப்படும் என நீர்வளசபையின் தலைவர் பந்துல முனசிங்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நீர்வளசபை சட்டத்திற்கு திருத்தங்கள் பல கொண்டுவரப்படவுள்ளன. இதன்படி 12 அடிக்கு கூடிய விட்டமுள்ள கிணறு தோண்டுவதற்கு முன் அனுமதி பெறவேண்டியிருக்கும். குடிநீரை போத்தலில் அடைக்கும் நிறுவனங்கள் அவை பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப நீர்வளசபைக்கு காப்புரிமை பணம் செலுத்தவேண்டும். குழாய் கிணறு அமைக்கும் நிறுவனங்கள் பதிவுக் கட்டணமாக 15,000 ரூபாவும் அதை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்காக 10,000 ரூபாவும் கட்டவேண்டும். ஆறுகள், குளங்கள், அருவிகள், வாய்க்கால்கள், நிலவடிநீர் என்பவற்றை மாசடையாது பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும். அடுத்த 40, 50 வருடங்களில் சுத்தமான நீர் மிகவும் பெறுமதி வாய்ந்ததாகவ...

கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்கு 9 தமிழ், முஸ்லிம் அறிஞர்கள் தெரிவு

கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்காக ஒன்பது தமிழ் மற்றும் முஸ்லிம் அறிஞர்களை கிழக்கு மாகாணக்கல்வி மற்றும் பணிப்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவு செய்துள்ளது. இவர்களின் பெயர்களை உத்தியோகபூர்வமாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.டபிள்யு.டி.வெலிக்கல இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். கணபதிப்பிள்ளை பாக்கியராசா (துறைநீலாவணை), ஆறுமுகம் தங்கராசா (ஆரையம்பதி), கணபதிப்பிள்ளை சபாரத்தினம் (ஆரையம்பதி), பேரம்பலம் கனகரத்தினம் (திருகோணமலை), வேலுப்பிள்ளை நாகராசா சந்திரகாந்தி (திருகோணமலை), கோஸ் முகமது அப்துல் அஸீஸ் (சாய்ந்தமருது), முகம்மது ஹனிபா முகம்மது புகாரி (காத்தான்குடி), பக்கீர் முகையிதீன் கலந்தர்லெவ்வை (அட்டாளைச்சேனை), அப்துல் மஜீத் முகம்மது அலி (கிண்ணியா) ஆகியோர் இலக்கியம், சிறுகதை, கவிதை கலைத்துறை மற்றும் பல்துறை ஆகியவற்றில் ஆக்கப்பணி புரிந்தமைக்காக முதலமைச்சர் விருதுக்கு தெரிவு செய்யபட்டுள்ளனர். இவர்களுக்கு எதிர்வருகின்ற அக்டோர் 18ஆம் திகதி திருகோணமலையில் விவேகானந்தா கல்லூரியில் நடத்தப்படவுள்ள 2012ஆம் ஆண்டுக்குரிய மாகாண கலை இலக்கிய விழாவில் இவர்கள் ம...

மூதூர் கடலில் மூழ்கி மரணித்தோர் விபரம்

மூதூர் கபீப் நகர் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற 3 பேர் மரணமான சம்பவம் மூதூரை மிகுந்த கவலைக்குள்ளக்கியது. நோன்புடன் இவ்மூவரும் கடல் குளிக்கும் போது தூரத்தில் தெரிந்த வலைக்கம்பை பிடித்திவிட்டு திரும்பும்  போது இச்சம்பவம் நடந்திருக்கலாம் என பலரது அபிப்பிராயம். இதில் ஜாயா வீதி , மூதூர் .04 எனும் விலாசத்தில் வசிப்பவரும் ஹபீப் நகர் பகுதியில் திருமணம் முடித்தவருமான ஜுனைத் ஷஹி (29 வயது) என்பவரும் முஹம்மது லாபிர்  ரிஜான் என்பவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் (இவர்கள் மூதூர் சலித் மௌலவி (நத்வி) அவர்களின் ஓன்று விட்ட சகோதரர்கள் ) மற்றவர் அனைச்சேனையை சேர்ந்த சமூர்த்தி உத்தியோகத்தர் நசீரின் மகன் இர்பான். வியாழக் கிழமை பி.ப. 5.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தின் உடனே ஷஹீயின் மையத்தை வைத்தியசாலைக்கு கொண்டு வந்தும் இரவு 8.30 மணி வரை மையத்தை பெற்றுக் கொள்ளமுடியாது போனதை இட்டு பொதுமக்கள் வைத்தியர் Dr. பிரேம் MS மீது விசனம் தெரிவித்தனர். அவரை அணுகியபோது அவர், தான் 6.20 pm மணிக்கு திடீர் மரண விசாரணை அதிகாரியான லாபீர் JP இன் அறிக்கை பெற்று மையத்தை வழங்குமாறு பணித்ததாகவும் அதனை அறிக்க...