மூதூர் பிரதேச செயலக ஊழியர்கள் சிலர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் தற்காலிகமாக வேலை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இடம் பெயர்ந்த அகதிகளுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டதில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டே இவ் இடை நிறுத்தம் இடம்பெற்றுள்ளதாக செயலக வட்டாரம் குறிப்பிடுகின்றது. பெரியபால கிராம சேவையாளராக கடமை புரிந்த எம்.ஏ. எம். பாரிக் அவர்களுடன் இரண்டு உயர் அதிகாரிகளும் இச்சம்பவத்தில் சிக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் சிக்கியுள்ள உயர் அதிகாரிகளின் வேலை இடை நிறுத்தத்தில் பின்னணி வேறாக இருக்குமோ அல்லது உண்மையில் இவர்களுக்கும் பாரிக் என்பவருடன் தொடர்பு இருக்குமோ என்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகின்றது. எது எப்படி இருப்பினும் இவ் முஸ்லிம் உயரதிகாரிகள் இல்லாத நிலை முஸ்லிம் மக்களுக்கான சேவையில் ஓர் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை. இது குறித்து பிரதேச சபை உறுப்பினரும் இச் சம்பவத்தை புகார் செய்தவருமான பி.ரி.எம். பைசர் என்பவர் தான் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு "பாரிக் G . S மற்றும் தனக்கு எசிய உயர் அ...