Skip to main content

Posts

Showing posts from September, 2015

முஸ்லிம் காங்கிரஸ் முதலாவது தேசிய பட்டியல் : இரண்டரை வருடங்களுக்கு முன்னாள் பிரதி அமைச்சர் தவ்பீக்குக்கு

5 தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் கங்கிராஸ் தேசிய பட்டியலுக்கான நிரந்தர நியமனம் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் வழங்கப்படும் எனும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் முதல் நிரந்தர நியமனம் திருகோணமலை மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த சனியன்று முதூர் விஜயம் விஜயம் செய்த தலைவர் ஹக்கீம் இரண்டரை வருடங்களுக்கு வழங்கபடவுள்ள   முதலாவது தேசிய பட்டியல்  நியமனம் தொடர்பாக இறுதி தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது. முன்னாள் பிரதி அமைச்சர் தவ்பீக் அவர்களுக்கே முதல் இரண்டரை வருடங்களுக்கு தேசிய பட்டியல் நியமனம்  வழங்கப்படவுள்ளதாகவும் எஞ்சியுள்ள இரண்டரை வருடங்கள் வன்னிக்கு வழங்கப்படும் என  முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன. முஸ்லிம்  காங்கிராஸ் வசமுள்ள இரண்டாவது  தேசிய பட்டியல் இரண்டரை வருடங்களுக்கு அட்டாலசேனைக்கு வழங்கபடும் எனவும் மிகுதி இரண்டரை வருடங்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் அல்லது  கம்பஹா ,குருநாகல்.கொழும்பு,கல்குடா ஆகிய பிரதேசங்களில்  ஒரு பிரதேசத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

துபாய் விபத்தில் இலங்கையை சேர்ந்த பாஹிம் என்பவர் (வயது 36) வபாத்.

12:33 PM   madawalanews 0    எப்.முபாரக் & மல்லவபிட்டிய நிவ்ஸ்                           துபாய் நாட்டில் கடந்த சனிக்கிழமை(26) மாலையில் இடம்பெற்ற விபத்தில் திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும் குருநாகலை வசிப்பிடமாகவும் கொண்ட பிச்சைத்தம்பி பாஹிம் வயது(36) என்ற இளம் குடும்பஸ்தர் உயிழந்துள்ளார்.        (இவர் சில்வர் அப்பா) அவரின் அன்பு மகனாவார் பொருட்கள் ஏற்றிகொன்டு ஒரு வாகனத்தில் பயனித்து கொன்டு இருக்கும் போதே  பின்னால் வந்த டிப்பர் வாகனமொன்று மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த இவர் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.                               இவரின் சடலத்தை துபாயில் நல்லடக்கம் செய்ய இருப்பதாக உரவினா்கள் எங்களுக்கு கூறினார்கள்

புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை

புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இன்று (25) அதிகாலை பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இதற்கமைய புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை சிலாபத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னேஸ்வரம் கிபில்லவெவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பாரிய ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்கும் குழு இன்னும் மகிந்த வீட்டுக்கு செல்லவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் விசாரணை நடத்துவதற்கு, பாரிய ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக தமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஒன்று மிரிஹானையில் உள்ள மகிந்தராஜபக்ஷவின் இல்லத்துக்கு இன்று முற்பகல் 10 அணி அளவில் செல்லவிருந்ததாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். எனினும் அந்த குழு இன்னும் மகிந்தராஜபக்ஷவின் மிரிஹானை இல்லத்துக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அரச ஊடகங்களின் ஊடாக ஒளிபரப்பான விளம்பரங்களுக்கு உரிய கொடுப்பனவு செலுத்தப்படாமை குறித்து இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் டி.பி.ஜெயசுந்தர ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்காவில் ஹாஜிகளிடத்தில் நடாத்தப்படவிருந்த பாரிய சதி மோசடி சவூதி காவல் துறைகளின் அதிரடி நடவடிக்கையால் முறியடிப்பு சம்பவத்தின் விபரம்.

மக்காவில் ஹஜ்ஜின் போது ஹாஜிகளுக்கு வழங்குவதற்காக 70 ஆயிரம் போலியாக உருவாக்கபட்ட  குர்ஆன் பிரதிகள் .அடங்கிய பெரிய ட்ரக் ஒன்றை சவூதி காவல்துறையினர் மடக்கிப்பிடித்துள்ளனர் இக்குறான் பிரதிகளை இஸ்லாமிய ஆய்வு நிலையத்துக்கு உடனடியாக அனுப்பிவைத்துள்ளனர் சாரதியோடு மேலும் நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .. பலமுறை இப்படியான சூழ்ச்சிகளை செய்து ஷியாக்கள் தோல்வியடைந்த நிலையில் மற்றுமோர் பாரிய சதி இது எனக்கூறப்படுகிறது . அல்லாஹ்வின் மார்க்கத்தை குழப்ப முயற்சிப்பவர்களை அல்லாஹ் காட்டிக்கொடுக்காமல் இருப்பதில்லை !! -TPT MEDIA- தகவல்: http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20150922257437

புது அறிமுகம்.. அனைத்து மொபைல்களிலும் இணைக்கக்கூடிய பென் டிரைவ் வெளியானது.

இதுவரை பென் டிரைவை கணனியில் மட்டுமே உபயோகிக்கும் ஒரு வசதி இருந்த நேரத்தில் சில மொபைல்களிலும் உபயோகிக்கலாம் ஆமா மற்றும் இல்லை என இரட்டை பதில்கள் ஏன் என்றால் அனேக மொபைல்களில் எ எஸ் டி கார்ட் தவிர வேறு ஒன்றும் உபயோகிக்க இயலாது.  இதை எல்லாம் உடைக்கும் வண்ணம் வந்துள்ள புது சான்டிஸ்க் பென் டிரைவ்.  இனிமேல் 150 அடி தள்ளி இருக்கும் கணணி / மொபைல் / டேப்ளேட் என அனைத்திலும் தகவல் புகுத்த எடுக்க ஏதுவாக உருவாகி இருக்கும் இந்த பென் டிரைவ் 16 ஜிபி கெப்பாசிட்டி உள்ளது. இதன் இந்திய சந்தை விலை 4500 - 5200 ரூபாய்கள் என தெரிகிறது. இது 8 உபகரணங்களை ஒரே நேரத்தில் கனெக்ட் செய்யும் திறனும் இதில் படம் இருந்தால் அதை அப்படியே டிவித்திரையில் பார்க்கவும் முடியும். வைஃபை டெக்னாலஜியை இந்த பென்டிரைவ் கொண்டிருப்பதால் எந்த ஒரு உபகரணத்துடன் இது பர்ஃபெக்டாய் வேலை செய்யும் திறன் படைத்தது.

மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை குறிப்பு.

உலகத்தில் வாழ்கின்ற கோடான கோடி மக்களில் அதிகமான    மக்களின் இலட்சியம்  தனது வாழ்வாதரத்தை உயர்த்த வேண்டும் என்பதாகவே இருக்கின்றது  அதற்காகவேதான் அநேகமான மக்கள் இன்று   சிறந்த முதலீடாக படிப்பையும் தொழிலையும் மேற் கொள்கிறார்கள் என்பதை நாம் அறிவோம் சமூகத்தில்  தானும் தமது குடும்பமும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கின்றது இது அவர்களின் உரிமையே இதற்காக நாம் அவர்களை குறைகூற முடியாது.  ஆனால் அவ்வாரான மக்கள் வாழ்கின்ற உலகிலும் கணிசமான மக்கள் சமூகத்தை பற்றியும்  சிந்திக்கிறார்கள் அதற்காக சிலர் தன்னை அர்ப்பணிக்கிறார்கள் தனது செல்வத்தை வாரி வழங்குகிறார்கள் சமூகத்துக்காக குறல் கொடுக்கிறார்கள் அவ்வாறான மனிதர்களை  இன்று வரை உலகமும் நினைவு கூறிக் கொண்டுதான் இருக்கின்றது என்பதுதான் எதார்சனமான உண்மையுமாகும் அவ்வாறு சமூகத்தை  பற்றி சிந்திக்க கூடிய ஒரு மா பெரும் தவைராக எமது நாட்டில் பிறந்து மறைந்தவர்தான் மர்ஹூம் அஷ்ரப் என்பதை யாராலும் மறுக்க முடியாது ஆகவேதான்  அவரின் ஆரம்ப கால வாழ்க்க...

வட மாகாணசபை வாயிற் கதவை மூடி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் - பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய செயலணி உருவாக்கம்

[ செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2015, 08:36.05 AM GMT ] வடமாகாணசபைக்கு முன்பாக வேலைவாய்ப்புக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை நிறைவேற்ற பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் பேசுவதற்கு 7 பட்டதாரிகள் மற்றும் 7 மாகாணசபை உறுப்பினர்கள் கொண்ட செயலணி உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாணசபை ஆளுகைக்குட்பட்ட வெற்றிடங்களை நிரப்புமாறு பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டதாரிகள் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இரண்டாவது தடவையாக வடமாகாண சபையினர் பட்டதாரிகளை அழைத்துப் பேசியிருந்தனர். இதன்போது இரு பகுதியினருக்குமிடையில் கடுமையான வாய் தர்க்கம் இடம்பெற்று ஒரு வாறாக செயலணி ஒன்றை உருவாக்க உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புமாறு மத்திய அரசை கோரும் பிரேரணை சபையில் மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. எமக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுங்கள்: வட மாகாண...

போர்க்குற்ற விசாரணைகளின் போது புலிகளுக்கு நிதி வழங்கியோரும் உள்ளடக்கப்படுவர்!- ஐநா பேச்சாளர்

[ செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2015, 02:23.22 AM GMT ] ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, போர்க்குற்ற விசாரணைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பேச்சாளர் ரவீனா தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் சார்பில் வெளிநாடுகளில் இயங்கியவர்களுக்கும் விசாரணைகளில் ஒரு பங்காக இருப்பர் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறப்பு பேச்சாளர் ரவீனா சம்டாசனி தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசாங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியிட்ட அடிப்படையில் அதில் இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் அடுத்தகட்ட பணியாக இருக்கிறது என்று ரவீனா தெரிவித்துள்ளார்.

போக்ஸ்வாகன் குறித்து ஐரோப்பா எங்கிலும் விசாரணைக்கு கோரிக்கை

அமெரிக்காவில் கார்களுக்கான புகை வெளியேற்றச் சோதனையில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதை அடுத்து ஐரோப்பா எங்கிலும் அந்த கார்களின் சோதனை குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டு நிதி அமைச்சர் கோரியுள்ளார். Image copyright d Image caption ஃபோக்ஸ்வாகன் குறித்து ஐரோப்பா எங்கிலும் விசாரணைக்கு கோரிக்கை வானொலி ஒன்றில் பேசிய மைக்கல் சப்பின் அவர்கள், ஐரோப்பிய விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறியதுடன், ஐரோப்பிய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டும் கார்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஃபோக்ஸ்வாகன் நிறுவன பங்களின் விலையில் இன்றும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் பல கார் உற்...

(வீடியோ) முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த அசாத் சாலி தனக்கும் தனது குடுபத்துக்கும் துரோகம் இழைக்கமாட்டார் என நான் நம்பினேன் : கண்ணிருடன் மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார். ‪

நேற்று முன்தினம் மத்திய மாகாண சபை உறுப்பினர்  அசாத் சாலி நான்கு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரை  இலக்கம் பதினாறு நாவலை வீட்டில் தடுத்து வைத்திருப்பதாக கூறி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த அதேவேளை குறித்த பெண்மணியின் உறவினர்கள் சிலர் அசாத் சாலியின் வீட்டை சுற்றி வளைத்த சம்பவம் உடகங்களில் வெளியான நிலையில், அந்த வீட்டில் இருந்த குறித்த பெண்மணியை விசாரணைக்கு உற்படுத்திய போது அவர் தனது சொந்த விருப்பத்தில் அங்கு தங்கியிருப்பதாகவும் அவரை அங்கு எவரும்  தடுத்து வைக்கவோ கடத்திவரவோ இல்லை எனவும் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும்   குறித்த பெண்மணி தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மடவளை நியுசுக்கு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக நேற்று ஹிரு தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்திருந்த அசாத் சாலி குறித்த பெண்மணியை தான் கடந்தவோ தடுத்து வைக்கவோ இல்லை  அவர் அவரது வீட்டை விட்டு சொந்த விருப்பத்தில்  வெளியேறியுள்ளதாக பொலிஸ் வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில...

கிழக்கு மாகாண சபையில் இருவர் ஆளுங்கட்சியுடன் இணைவு..

File pic (சுலைமான் றாபி)  கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர்களாக செயற்பட்ட இருவர் சற்று முன்னர் ஆளுங்கட்சியுடன் இணைந்துள்ளனர். அந்த வகையில் ஐ.ம.சு.மு சார்பாக கடந்த மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.அமீர் மற்றும், கே.புஸ்பகுமார்  ஆகியோரே இன்று (22) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாகாணசபை அமர்விலே ஆளுங்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர். இதேவேளை தற்போது கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வரிசையில் 5 பேர் மாத்திரமே அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கண்மூடித்தனமான செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாடு.

-றியாஸ் ஆதம் : For Madawala News கிழக்கு மாகாண முதலமைச்சரின் கண்மூடித்தனமான செயற்பாடுகள் குறித்து சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளத்தினூடாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் அழைக்கப்படாமல் புறக்கனிக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்புக்கள் கிடைப்பதில்லை இதுதொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்ற போது அந்தந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு என்னைப்போன்ற ஏனைய ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களை அழைக்க வேண்டாமென முதலமைச்சர் உத்தரவிடுவதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வாறான முதலமைச்சரின் செயற்பாடுகளை தான் வன்மையாகக் கன்டிக்கின்றேன். குறிப்பாக நான் கிழக்கு ம...

மஹிந்த ராஜபக்ஷவின் இப்போது ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்­தி­ருந்தால்......

சர்­வ­தேச தரத்­தி­லான விசா­ர­ணை­யையே ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு அறிக்கை கலப்பு நீதி­மன்றம் என்ற பெயரில் வலி­யு­றுத்­தி­யுள்­ளதே தவிர இது சர்­வ­தேச விசா­ர­ ணை­யல்ல என்று தெரி­வித்­துள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்­தி­ருந்தால் எமது நாட்­டுக்கு எதி­ராக பொரு­ளா­தார தடை விதிக்­கப்­பட்­டி­ருக்கும் என்றும் தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக நெடுஞ்­சா­லைகள் மற் றும் பல்­க­லைக்­க­ழகக் கல்வி தொடர்­பான அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை வந்த ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீன் மூனிடம் யுத்தக் குற்­றச்சாட்­டுகள் தொடர்­பாக உள்­ளக விசா­ர­ணை கள் நடத்­தப்­ப­டு­மென முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவே உறுதி மொழி வழங்­கினார். ஆனால் அது நிறை­வேற்­றப்­ப­டா­ததன் கார­ண­மா­கவே ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென்ற நிலைப்­பாட்டை எடுத்­தது. ஐ.நா.வும் சர்­வ­தே­சமும் இந்த நிலை­பாட்டை எடுக்­கையில் மஹிந்த தோல்வி கண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது. புதிய அ...